Rajkumar Palaniswamy, இணைப்பு-ஐப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . அதனால் ஆங்கிலம் கற்றால் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்று. இந்த கூற்றை முற்றும் உடைத்து எறிந்தனர் புலிகள். அவர்களுடையை அனைத்து ராணுவ பயிற்சிகள் மற்றும் பொறிமுறைகளை தமிழ் மொழியிலேயே வகுத்தனர். தமிழில் அறிவியலை கற்று அதனை ஆவணப் படுத்தினர். அந்த அறிவியலை உலகே வியக்கும்படி வடிவமைத்து காட்டினர் புலிகள். இதோ ஒரு சான்று.
புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !
குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும்.
அன்புச் செல்வன், Tnfishermen Voices மற்றும் வேறு 47 பேர்கள்ஆகியோரின் விருப்புக்குரியது.
அன்புச் செல்வன், Tnfishermen Voices மற்றும் வேறு 47 பேர்கள்ஆகியோரின் விருப்புக்குரியது.
கோல்கானூர் அதியமான் தமிழுக்கு நிகர் தமிழ்தான் தமிழனுக்கு நிகர் தமிழன்தான் ...
Ben Yesupatham //ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . // அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.
Kondal Samy அந்த பெரியவர் தன் கருத்தை எந்த இடத்தில் எந்த சூழலில் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுக்கள் .மற்ற படி உங்கள் கருத்து சரியானது தான்.தன் தாய் மொழியில் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்பதை புலிகள் உணர்த்தினார்கள்.
Nilavarasu Nila //அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.// இந்த வம்படி வாழக்கு செய்வதற்கு பதிலாக, அந்தப் பெரியவர் எந்தச் சூழலிலும் அப்படி சொல்லி இருக்கக் கூடாது, தாய் தான் பிள்ளைகளை விட்டுக் கொடுத்துப் பேசுவது அவர்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை உணருங்கள். அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
செல்லையா முத்துசாமி ஒருமொழியில் அமைந்த அதன் படைப்புகளில் பிற்போக்குத்தனங்கள் கூடாது என்றுதான் பெரியார் சாடினார். அவர் சொன்ன மொழிச்சீர்த்திருத்தத்துக்கு முன்வராத பிற்போக்குவதிகளால் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாது. மொழியை தெய்வத்துக்கு நிகராக மதிக்கும் தமிழ்ப்பண்டிதர்கள் எவனுக்காவது அவர் சொன்ன விடயம் புரிந்திருந்தால் அதற்காகப் போராடியிருப்பான். அதை விட்டுவிட்டு பெரியாரையே குறைசொல்லத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். பெரியார் இதற்கு பதில் சொல்கிறார் படியுங்கள். http://www.chelliahmuthusamy.com/2012/02/blog-post_02.html
Rajkumar Palaniswamy அவர் சொல்லும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் அன்று. நீங்களே இன்னொரு முறை படித்துப் பாருங்கள். ஒருவருடைய மொழிக் கொள்கை பிழையானது என்றால் அது பிழை தான் . அதற்கு விளக்கம் அளிக்க முற்படுவது தவறு. பிழையை திருத்துவோம் , திருந்துவோம்.
Rajkumar Palaniswamy நாம் இங்கு யாரையும் திரைப்பட கதாநாயகனாக வழிபட இங்கு வரவில்லை . அப்படி செய்வது தவறு. ஒருவர் எல்லா வகையிலும் சரியானவர் என்று சொல்வதும் தவறு. பல இடங்களில் சரியான பாதையை காட்டியவர்களும் சில இடங்களில் தவறான கருத்துக்களை சொல்லியுள்ளனர் என்பதை மறுக்கக் கூடாது.
செல்லையா முத்துசாமி அவர் சொன்னதைத்தான் நானும் தந்திருக்கிறேன். அதில் என்ன குறைஎன்று சொல்லுங்கள். மேலும் மொழியின் புனிதம் குறித்து அக்கறைப்படும் நீங்கள், பாப்பான் தமிழை நீசமொழி என்று ஓதிக்கியதற்கு எதிராக என்ன செய்தீர்கள். தமிழ்மொழியின் வளமான இலக்கியங்களிலும் அந்தணன் பெருமை, மனுதர்ம துதி இப்படி பிற்போக்குத்தனமாகவும் நால்வருண பேதத்திற்கு ஆதரவாகவும் இருக்கிறதே. இதற்கெதிராக பேசுவதெல்லாம் உங்கள் பணியில்லையா? இதை தட்டிக்கேற்கும் பெரியாருக்கு இருக்கும் யோக்யதை தமிழின் பெருமை பேசும் ஒருவருக்காவது உண்டா?
Rajkumar Palaniswamy ஒன்றை நிரூபிக்க வேறொன்றில் பிழை உள்ளதே என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கூற்று. முதலில் நாம் அனைவரும் தமிழர்கள் . நம் மொழி தமிழ். இதற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய ஒவ்வாத , பார்பன மனு தர்மம் , வேதங்கள், இதிகாசங்கள் , பெரியார் , அம்பேத்கர் மொழிக் கொள்கைகள் (இவர்களுடைய சமூக கொள்கை அல்ல) என யாவையும் புறக்கணித்தல் அவசியமாகும். இதற்கு நாம் தயாராக வேண்டுமே தவிர நாம் கதாநாயக வழிபாடு செய்தல் கூடாது. தமிழின் பெருமையை நீங்கள் பேசாமல் வேறு யார் வந்து பேசுவார்கள் . இந்திகாரனா வந்து பேசுவான். தமிழராகிய நீங்கள் தான் பேச வேண்டும் . நீங்கள் தான் உயர்த்தி பிடிக்க வேண்டும். அதை விடுத்தது நமக்கு நாமே ஆப்பு அடிப்பது போல் தமிழ் மொழி காட்டு மிராண்டி மொழி , ஏன் சொல்கிறேன் தெரியுமா என எதிர் கேள்விகளை கேட்கக் கூடாது .
செல்லையா முத்துசாமி பெரியார் கூற்று தவறென்றும் அவருக்கு மொழிகுறித்த புரிதல் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். அவர் சொன்ன மனித இழிவு தமிழ்மொழியின் படைப்புகளில் இருப்பதைக் கண்டித்தோ, மனுதர்மத்தை போற்றிய தமிழ் மன்னர்கள், தமிழ்ப்பண்டிதர்கள் குறித்து எங்கேனும் ஓரிடத்திலாவது எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா? இன்றும் கூட அவர் சொன்ன அத்தனை இழிவும் அப்படியே இருக்கிறதே.
Rajkumar Palaniswamy இழிவுகளை களைய வேண்டியது அவசியம். அதற்கு பாடுபட்ட பெரியாரை போற்றுவோம்
செல்லையா முத்துசாமி நீங்கள் புலிகளின் பெயரால் எதைவேண்டுமானாலும் திரித்துப் பேசிவிடமுடியாது. அவர்கள் ஆட்சி புரிந்தளவிற்கு இந்தியப் பார்ப்பனிய ஆதிக்கத்தின்கீழ் தமிழர்கள் வாழ முடிந்திருக்கிறதா?புலிகளின் ஆயுதத் தயாரிப்பை பெரியாரின் கூற்றோடு பொருத்துவது தமிழ்தேசியவதிகளுக்கே கைவரப்பெற்ற அரசியல் தந்திரம். ஆண்டாண்டு காலமாக பார்ப்பான் செய்வதைத்தான் நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள். தமிழில் மதநம்பிக்கைகள் மிகுந்திருக்கும்போது அறிவியல் வளர்ச்சிவேகம் மட்டுப்படவே செய்யும். விண்வெளித் துறையில்மட்டும் இந்தியா நாற்பதாண்டுகாலம் பின்தங்கி இருப்பது உலகறிந்த உண்மை. காரணம் பாப்பான் காப்பாற்றும் இந்துமதம். இந்த பாப்பானின் மனுதர்மத்தை வைத்துக்கொண்டு தமிழ் சிறக்கவேண்டும் என்றால் எப்படி.
Ben Yesupatham Rajkumar Palaniswamy மதிமாறன் சொல்வது நினைவிற்கு வருகிறது. பெயர்பலகைகளில் ஒன்று ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருந்தால் மற்றொன்று தூய தமிழில் முதலியாரோ செட்டியாரோ என்று இருந்தால் முதலில் அந்த தமிழில் உள்ள பலகையை தான் உடைப்பார் பெரியார். மொழி மனிதனுக்கு பயன் படவேண்டும் ஒழிய மனிதன் மொழியை கட்டிக்காப்பதில் பயன் இல்லை குறிப்பாக தலித் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
செல்லையா முத்துசாமி பெரியாரைப் போற்றுவது என்பது அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதில்தான் உள்ளது.
Rajkumar Palaniswamy பெயரின் பின்னால் இந்தி காரனோ தமிழனோ சாதியை வைத்தால் நாம் முதலில் அதை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இதில் முரண்பாடும் இல்லை . மேலும் பார்பன மனு தர்மம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது தான்.
Rajkumar Palaniswamy அதேசமயம் தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதிலும் உறுதி .
செல்லையா முத்துசாமி விவதத்தின்போதுமட்டும் தமிழ்தேசியவாதிகள் பலர் சாதி, மதம் தமிழ்தேசியத்துக்கு எதிரானது என்கிறீர்கள். இப்போது மனுதர்மம் தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று நீங்கள் சொல்லியிருப்பதைப்போல. எதிரானவற்றின் மீது நீங்கள் போர்தொடுப்பதை விட்டுவிட்டு பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏன்? இதை தட்டிக்கேட்பவர்களை தனிமனித வழிபாடு செய்பவர்களைப்போல சித்தரிப்பது ஏன்?
செல்லையா முத்துசாமி தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோமா? பன்னெடுங்காலமாக அதுதானே நடந்துவருகிறது. அதற்கெதிராக என்னென்ன போராட்டங்கள் எவரெல்லாம் நடத்தினார்கள் என்று சொல்லுங்கள்.
செல்லையா முத்துசாமி Nilavarasu Nila, // அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.// காஞ்சி சங்கரனை பிடரியில் தட்டவேண்டாம் என்று பெரியார் வந்து தடுத்தாரா? உங்கள் சோம்பேறித்தனத்துக்கும் தொடை நடுங்கித்தனத்துக்கும் இப்படியும் ஒரு சமாளிப்பா?














