Friday, May 25, 2012

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் தமிழ்தேசியவாதிகள்.

Rajkumar Palaniswamy, இணைப்பு-ஐப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . அதனால் ஆங்கிலம் கற்றால் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்று. இந்த கூற்றை முற்றும் உடைத்து எறிந்தனர் புலிகள். அவர்களுடையை அனைத்து ராணுவ பயிற்சிகள் மற்றும் பொறிமுறைகளை தமிழ் மொழியிலேயே வகுத்தனர். தமிழில் அறிவியலை கற்று அதனை ஆவணப் படுத்தினர். அந்த அறிவியலை உலகே வியக்கும்படி வடிவமைத்து காட்டினர் புலிகள். இதோ ஒரு சான்று.

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !
குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும்.
அன்புச் செல்வன், Tnfishermen Voices மற்றும் வேறு 47 பேர்கள்ஆகியோரின் விருப்புக்குரியது.

கோல்கானூர் அதியமான் தமிழுக்கு நிகர் தமிழ்தான் தமிழனுக்கு நிகர் தமிழன்தான் ...
Ben Yesupatham ‎//ஒருவர் பெரியவர் சொன்னார் தமிழ் மொழி அறிவியலுக்கு உகந்த மொழி அல்ல . அது ஒரு காட்டுமிராண்டி மொழி . // அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.
Kondal Samy அந்த பெரியவர் தன் கருத்தை எந்த இடத்தில் எந்த சூழலில் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுக்கள் .மற்ற படி உங்கள் கருத்து சரியானது தான்.தன் தாய் மொழியில் தான் அறிவியலில் சிறந்து விளங்க முடியும் என்பதை புலிகள் உணர்த்தினார்கள்.
Nilavarasu Nila ‎//அந்த பெரியவர் எதற்கு சொன்னார் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று புரிந்து கொள்ள முடியாதென்றால் தமிழன் என்றுமே காட்டுமிராண்டி தான்.// இந்த வம்படி வாழக்கு செய்வதற்கு பதிலாக, அந்தப் பெரியவர் எந்தச் சூழலிலும் அப்படி சொல்லி இருக்கக் கூடாது, தாய் தான் பிள்ளைகளை விட்டுக் கொடுத்துப் பேசுவது அவர்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை உணருங்கள். அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
செல்லையா முத்துசாமி ஒருமொழியில் அமைந்த அதன் படைப்புகளில் பிற்போக்குத்தனங்கள் கூடாது என்றுதான் பெரியார் சாடினார். அவர் சொன்ன மொழிச்சீர்த்திருத்தத்துக்கு முன்வராத பிற்போக்குவதிகளால் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாது. மொழியை தெய்வத்துக்கு நிகராக மதிக்கும் தமிழ்ப்பண்டிதர்கள் எவனுக்காவது அவர் சொன்ன விடயம் புரிந்திருந்தால் அதற்காகப் போராடியிருப்பான். அதை விட்டுவிட்டு பெரியாரையே குறைசொல்லத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். பெரியார் இதற்கு பதில் சொல்கிறார் படியுங்கள். http://www.chelliahmuthusamy.com/2012/02/blog-post_02.html

Rajkumar Palaniswamy அவர் சொல்லும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் அன்று. நீங்களே இன்னொரு முறை படித்துப் பாருங்கள். ஒருவருடைய மொழிக் கொள்கை பிழையானது என்றால் அது பிழை தான் . அதற்கு விளக்கம் அளிக்க முற்படுவது தவறு. பிழையை திருத்துவோம் , திருந்துவோம்.
Rajkumar Palaniswamy நாம் இங்கு யாரையும் திரைப்பட கதாநாயகனாக வழிபட இங்கு வரவில்லை . அப்படி செய்வது தவறு. ஒருவர் எல்லா வகையிலும் சரியானவர் என்று சொல்வதும் தவறு. பல இடங்களில் சரியான பாதையை காட்டியவர்களும் சில இடங்களில் தவறான கருத்துக்களை சொல்லியுள்ளனர் என்பதை மறுக்கக் கூடாது.
செல்லையா முத்துசாமி அவர் சொன்னதைத்தான் நானும் தந்திருக்கிறேன். அதில் என்ன குறைஎன்று சொல்லுங்கள். மேலும் மொழியின் புனிதம் குறித்து அக்கறைப்படும் நீங்கள், பாப்பான் தமிழை நீசமொழி என்று ஓதிக்கியதற்கு எதிராக என்ன செய்தீர்கள். தமிழ்மொழியின் வளமான இலக்கியங்களிலும் அந்தணன் பெருமை, மனுதர்ம துதி இப்படி பிற்போக்குத்தனமாகவும் நால்வருண பேதத்திற்கு ஆதரவாகவும் இருக்கிறதே. இதற்கெதிராக பேசுவதெல்லாம் உங்கள் பணியில்லையா? இதை தட்டிக்கேற்கும் பெரியாருக்கு இருக்கும் யோக்யதை தமிழின் பெருமை பேசும் ஒருவருக்காவது உண்டா?
Rajkumar Palaniswamy ஒன்றை நிரூபிக்க வேறொன்றில் பிழை உள்ளதே என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கூற்று. முதலில் நாம் அனைவரும் தமிழர்கள் . நம் மொழி தமிழ். இதற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய ஒவ்வாத , பார்பன மனு தர்மம் , வேதங்கள், இதிகாசங்கள் , பெரியார் , அம்பேத்கர் மொழிக் கொள்கைகள் (இவர்களுடைய சமூக கொள்கை அல்ல) என யாவையும் புறக்கணித்தல் அவசியமாகும். இதற்கு நாம் தயாராக வேண்டுமே தவிர நாம் கதாநாயக வழிபாடு செய்தல் கூடாது. தமிழின் பெருமையை நீங்கள் பேசாமல் வேறு யார் வந்து பேசுவார்கள் . இந்திகாரனா வந்து பேசுவான். தமிழராகிய நீங்கள் தான் பேச வேண்டும் . நீங்கள் தான் உயர்த்தி பிடிக்க வேண்டும். அதை விடுத்தது நமக்கு நாமே ஆப்பு அடிப்பது போல் தமிழ் மொழி காட்டு மிராண்டி மொழி , ஏன் சொல்கிறேன் தெரியுமா என எதிர் கேள்விகளை கேட்கக் கூடாது .
செல்லையா முத்துசாமி பெரியார் கூற்று தவறென்றும் அவருக்கு மொழிகுறித்த புரிதல் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். அவர் சொன்ன மனித இழிவு தமிழ்மொழியின் படைப்புகளில் இருப்பதைக் கண்டித்தோ, மனுதர்மத்தை போற்றிய தமிழ் மன்னர்கள், தமிழ்ப்பண்டிதர்கள் குறித்து எங்கேனும் ஓரிடத்திலாவது எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா? இன்றும் கூட அவர் சொன்ன அத்தனை இழிவும் அப்படியே இருக்கிறதே.
Rajkumar Palaniswamy இழிவுகளை களைய வேண்டியது அவசியம். அதற்கு பாடுபட்ட பெரியாரை போற்றுவோம்
செல்லையா முத்துசாமி நீங்கள் புலிகளின் பெயரால் எதைவேண்டுமானாலும் திரித்துப் பேசிவிடமுடியாது. அவர்கள் ஆட்சி புரிந்தளவிற்கு இந்தியப் பார்ப்பனிய ஆதிக்கத்தின்கீழ் தமிழர்கள் வாழ முடிந்திருக்கிறதா?புலிகளின் ஆயுதத் தயாரிப்பை பெரியாரின் கூற்றோடு பொருத்துவது தமிழ்தேசியவதிகளுக்கே கைவரப்பெற்ற அரசியல் தந்திரம். ஆண்டாண்டு காலமாக பார்ப்பான் செய்வதைத்தான் நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள். தமிழில் மதநம்பிக்கைகள் மிகுந்திருக்கும்போது அறிவியல் வளர்ச்சிவேகம் மட்டுப்படவே செய்யும். விண்வெளித் துறையில்மட்டும் இந்தியா நாற்பதாண்டுகாலம் பின்தங்கி இருப்பது உலகறிந்த உண்மை. காரணம் பாப்பான் காப்பாற்றும் இந்துமதம். இந்த பாப்பானின் மனுதர்மத்தை வைத்துக்கொண்டு தமிழ் சிறக்கவேண்டும் என்றால் எப்படி.
Ben YesupathamRajkumar Palaniswamy மதிமாறன் சொல்வது நினைவிற்கு வருகிறது. பெயர்பலகைகளில் ஒன்று ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருந்தால் மற்றொன்று தூய தமிழில் முதலியாரோ செட்டியாரோ என்று இருந்தால் முதலில் அந்த தமிழில் உள்ள பலகையை தான் உடைப்பார் பெரியார். மொழி மனிதனுக்கு பயன் படவேண்டும் ஒழிய மனிதன் மொழியை கட்டிக்காப்பதில் பயன் இல்லை குறிப்பாக தலித் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
செல்லையா முத்துசாமி பெரியாரைப் போற்றுவது என்பது அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதில்தான் உள்ளது.
Rajkumar Palaniswamy பெயரின் பின்னால் இந்தி காரனோ தமிழனோ சாதியை வைத்தால் நாம் முதலில் அதை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இதில் முரண்பாடும் இல்லை . மேலும் பார்பன மனு தர்மம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது தான்.
Rajkumar Palaniswamy அதேசமயம் தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதிலும் உறுதி .
செல்லையா முத்துசாமி விவதத்தின்போதுமட்டும் தமிழ்தேசியவாதிகள் பலர் சாதி, மதம் தமிழ்தேசியத்துக்கு எதிரானது என்கிறீர்கள். இப்போது மனுதர்மம் தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று நீங்கள் சொல்லியிருப்பதைப்போல. எதிரானவற்றின் மீது நீங்கள் போர்தொடுப்பதை விட்டுவிட்டு பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏன்? இதை தட்டிக்கேட்பவர்களை தனிமனித வழிபாடு செய்பவர்களைப்போல சித்தரிப்பது ஏன்?
செல்லையா முத்துசாமி தமிழ் மொழியை யார் இழிவு செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோமா? பன்னெடுங்காலமாக அதுதானே நடந்துவருகிறது. அதற்கெதிராக என்னென்ன போராட்டங்கள் எவரெல்லாம் நடத்தினார்கள் என்று சொல்லுங்கள்.

செல்லையா முத்துசாமி Nilavarasu Nila, // அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி 'தமிழ் நீஷ பாஷா ஈன்ற போது தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.// காஞ்சி சங்கரனை பிடரியில் தட்டவேண்டாம் என்று பெரியார் வந்து தடுத்தாரா? உங்கள் சோம்பேறித்தனத்துக்கும் தொடை நடுங்கித்தனத்துக்கும் இப்படியும் ஒரு சமாளிப்பா?

Sunday, May 20, 2012

ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து {படங்கள்}

அய்நாவே, இந்திய அரசே ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து' என்ற தலைப்பில் 19-05-2012 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வைகோ, சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் உரிமை முழக்கமிட்டனர்.

Sunday, May 13, 2012

அதிகாரத்திற்கெதிராக... _ கொளத்தூர் மணி

வழக்கு எண் 18/9


மிகக்கேவலமான படம் என்று சொல்ல இயலாததைப் போலவே மிக நல்லபடம் என்று மட்டுமல்ல; நல்லபடம் என்று சொல்கிற அளவிற்குகூட என்மனதைத் தைக்கவில்லை. 

கிராப்ட்; இயல்பைக் குலைக்கும் படைப்பாளியின் மனஓட்டம்; மனதோடு ஒட்டாத சினிமாத்தனம். (மொக்கைப்படங்களின் சினிமாத்தனத்துக்கு மாற்றாக ஒருவகையான சினிமாத்தனம்.

கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சொல்லிவைத்தற்போல படத்தைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர்களுக்கு நாயகியின் வீட்டில் காட்டப்படும் பொதுவுடைமை நூல்கள் போதுமானதாக இருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது இப்படத்துக்கு வழங்கப்படுவது உறுதி. 

அடுத்துவரும் படங்களில் எவரேனும் ஒரு நூலகத்தையே காட்டக்கூடும்.

(எந்தப்படத்தை இந்தப்பதிவுக்கு இணைப்பதெனக் குழம்பி, பின்னர் படத்தில் அழகாக இருக்கிறார் என்பதற்காக இவரது படத்தை இணைக்கவேண்டியதாகிவிட்டது.)


FROM FACEBOOK....

Clk Annamma எல்லோரும் ஆகா ஓஹோ என்றார்களே என்று நானும் சர மாரியாக விருப்பம் தெரிவிச்சேன் தோழர்...அப்படி எல்லாம் இல்லிங்களா?! அட கருமமே...ஒரு படம் பார்க்க நான் கிட்ட தட்ட பயணம் , படம் பார்க்கும் நேரம் , பேருந்து காத்திருத்தல் அனைத்திற்கும் சேர்த்து ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும்...நான் மதுரையில் இருக்கும் வரை மூணுமணி நேரம் ஒதுக்க வேண்டும் அதுவே முடியலைன்னு இருந்தேன்...இப்போ அதை விட அதிக நேரம் ஓதிக்கனாத்தான் நான் படம் பார்க்க முடியும்...ஆகையால் இப்பொழுது முகநூலில் வரும் விமரசனத்திற்கு ஏற்ப விருப்பம் தெரிவித்துக் கொண்டு வருகிறேன்...என்னமோ படம் பார்த்த மாதிரி.,..!!

உங்களைப் போல் ஒரு சிலரை தவிர அப்படம் ரொம்ப ரொம்ப நல்ல இருக்குனு கேள்வி பட்டேன்...ஆனால் நல்லாவே இல்லைன்னு நீங்கள் சொல்றீங்க அதற்கு அருமையான விளக்கமும் தரீங்க...தோழர் பேசாம படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து மக்களுக்கு ஒரு கட்டுரை போடுங்க தோழர்...செய்வீர்களா?!




செல்லையா முத்துசாமி இல்லை தோழர் படம் பாருங்கள். தூக்கிநிறுத்தப்படும் பிம்பங்களின் மீது ஒரு கல்லை எறிந்திருக்கிறேன். அவ்வளவுதான். என்னோட விமர்சனத்தைப் படிச்சதுக்குப்பின் படம்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.



Clk Annamma செல்லையா முத்துசாமி என்னோட விமர்சனத்தைப் படிச்சதுக்குப்பின் படம்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.//

உண்மைதான் உங்கள் விமர்சனம் நான் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று தூண்டியது எல்லோரும் நல்ல இருக்குனு சொன்ன போது உரைக்காத மனம் உங்கள் விமர்சனம் பார்த்தே ஆக வேண்டும் என்று தூண்டியது தோழர்...ஆகையால் நீங்கள் கூறுவது சரியே தோழர்...


Pugazhenthi Gugai ‎'அழகி'ய விமர்சனம்
பார்க்கத் தூண்டியபடி
ஓர் ஊஞ்சல் தொங்கல் வார்த்தைகளில் .
படத்திற்கென்னவோ கூடுதல் பலம் .



Keelapavoor Piramanayagam இதுவரை பார்க்கவில்லை ஆளாளுக்கு ஓரு விமர்ச்சனத்தை முன் வைத்தனர் சிறந்த படமென்று உங்கள் வாதம் வேறொரு கோணத்தில் பயணிக்கின்றது படம் பார்த்து கதை சொல்கிறேன்


Kondal Samy வழக்கு எண் 18/9

நீண்ட நாட்களுக்கு பின்
நிஜத்தின் மிக அருகாமைகளில் ஒரு படம்.

இது என் கருத்து தோழர் !!!

Wednesday, April 11, 2012

திராவிடன் என்ற அ​​டையாளம் ஏன்?

விடுத​லை ரா​சேந்திரன்:

நாம் தமிழர் தமிழர் என்று ​சொல்லிக்​​கொண்டிருக்கி​றோ​மே, ​பெரியார் இந்த தமிழ்ச்சமுதாயத்​தைப்பார்த்து என்ன ​கேட்டார்.

நாம் தமிழன் என்று ​சொல்லுவதற்குரிய வாழ்க்​கை​யை வாழ்ந்து​கொண்டிருக்கி​றோமா? அந்தப் பண்பாட்​டை ​பேணிக் காத்துவருகி​றோமா?

நாம் கட்டிய ​கோயில்களில் தமிழ் இல்​லை.
நம்வீட்டுத்திருமணத்தில் தமிழ் இல்​லை.
நம் பிள்​ளைகளுக்குப் ​பெயர் தமிழில் இல்​லை.
நம் பண்டி​கைகள் தமிழனு​டையதல்ல.
இந்நி​லையில் தமிழன் என்ற அ​டையாளம் சரியா?

நமக்குத் ​தொடர்பில்லாத சாதி​யைக் கட்டிக்காக்கி​றோம்.
நமது இலக்கியங்களில் கூட ​சொல்லப்படாத இந்து என்ற அ​​டையாளத்​தை ஏற்றுக்​கொண்டிருக்கி​றோம்.

நமது  சமுதாயத்​தை இழிவுபடுத்துகிற மதம், கடவுள், ​வேதம், இதிகாசங்கள், சாதிய அ​மைப்பு, பக்தி  இ​வை எல்லாவற்​றையும் ஏற்றுக்​கொண்டு தமிழன் தமிழன் என்று ​சொன்னால், நாம் தமிழன் என்பதற்கு என்ன அ​டையாளத்​தை ​வைத்திருக்கி​றோம் என்பதுதான் ​​பெரியாரின் ​கேள்வி.

இன்​றைக்கும்  ​பெரியாரின்  அந்தக் ​கொள்​கைக​ளை முன்​னெடுப்பதற்கான ​தே​வை இருக்கிறதா  இல்​லையா?

Monday, April 9, 2012

செல்லப்பிராணிக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்போம்


இன்று (9.4.12) மக்கள் தொலைக்காட்சியின் செல்லப்பிராணிகள் நிகழ்ச்சியில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது மாதிரி வீட்டுக்கொரு செல்லப்பிராணி வளர்க்கவேண்டும் என்றார் நிகழ்ச்சித்தொகுப்பாளர்.

மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். சரிதான். (செல்லப்பிராணிக்கும் கிடைக்குமா தெரியவில்லை)

அடுத்ததாக "எல்லோரும் செல்லப்பிராணிகள் வளர்த்து அவற்றுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கொடுப்போம்(???!) என்றார்.

எனக்கு கல்யாண்ஜியின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

பேசும் கேள் என் கிளி என்றான்
கூண்டைக்காட்டி
வால் இல்லை
வீசிப்பறக்க சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பார் பார் இப்போது பேசும் என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை என்றால் பறப்பது எனும்
பாடம் முதலில் படி என்றேன்.

Saturday, April 7, 2012

பார்ப்பான் தமிழனா? புதிய த​லைமு​றை விருதுகள் பற்றி...

பார்ப்பனரல்லாதார் என்ப​தைக் குறிக்க​வே திராவிடன் என்ற ​சொல் என்​றோம். தமிழ்​ பேசுவதால் தமிழன் என்ற அ​டையாளத்துக்குள் பார்ப்பானும் வந்துவிடுவான் என்​றோம். ​

பெரியா​ரையும் திராவிடர் இயக்கங்க​ளையும் ​கொச்​சைப்படுத்தும் பார்ப்பானின் ​பெருவிரல்சப்பிகள் சிலர், பார்ப்பான் தமிழனாகமாட்டான் என்றனர். (அதுவும் அவர்கள் தமது நி​லைப்பாட்​​டைச் ​சொல்ல​வேண்டும் என்று ​நாம் ​நெருக்கடி ​கொடுத்ததால் ​வேறுவழியின்றி ​சொல்ல​வேண்டியதாயிற்று.)

இப்​போது புதியத​லைமு​றை தமிழன் விருதுகளில் 4 பச்​சைப்பார்ப்பனர்கள். இவர்கள் தமிழ​ரே அல்ல என்று எவனாவது  புதியத​லைமு​றை​யைக் கண்டித்தீர்களா? (​இனி ​வேறுவழியின்றி ​முகநூலில் மட்டும் கண்டித்ததாக காட்டிக்​கொள்வார்கள்)

பார்ப்பான் ஆண்டாண்டு காலமாக நமது இனஇழிவுக்குக் காரணம் என்கி​றோம். அவ​னை இந்த பி​ழைப்புவாதிகள் எதிரியாக நி​னைப்பதில்​லை. பார்ப்பானின் இந்துமதம் வருண​பேதங்க​ளைக் காக்கிறது என்கி​றோம்.  இவர்களுக்கு அ​தை எதிர்க்கத் துணிவில்​லை. இதில் ஒருபடி ​மே​லே​​போய் இந்துத்துவ ​வேட்பாளருக்கு ​தேர்தல் பரப்பு​ரையில் ஈடுபட்டார் நாம் தமிழர் என்று ​சொல்லிக்​கொள்ளும் சீமான். இவர் ​தன்​னை ​பெரியாரின் ​பேரன் என்று நாகூசாமல் ​சொல்லிக்​கொள்கிறார். ஆனால் திராவிடத்தால் வீழ்ந்​தோம் என்கிறார்.

புதிய த​லைமு​றை கூடங்குளம் விவகாரத்தில் மட்டுமல்ல பல விடயங்களில் அத்​தொ​லைக்காட்சியின் பார்ப்பனிய முகம் ​வெளிப்படுகிறது என்​றோம். குறிப்பாக கல்பாக்கம் அணுஉ​லை குறித்த ஆவணப்படம் ஒன்​றை  ​ஒளிபரப்பினார்கள். அதில் கல்பாக்கத்தில் பணிபுரியும் ஒருவரது து​ணைவியார், எங்கள் பிள்​ளைக​ளும் இந்த அணுஉ​லையி​லே​யே பணியாற்றுவ​தைத்தான் விரும்புகி​றோம் என்று ​பேச​வைத்திருந்தார்கள். அந்த அளவிற்கு அணுஉ​லை ஒடம்புக்கும் சுற்றுச் சூழலுக்கும் ​​ரெம்ப....நல்லதாம்!

இடிந்தக​ரையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்க​ளை இழந்து உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும்  அதன்மூலம் எதிர்காலத் த​லைமு​றைக்கும் ​கேடு வி​ளையும் என்று பட்டினிப்​போராட்டத்தை ஈடுபட்டிருக்கும்​போது, சாந்தா என்ற பாப்பாத்தி மருத்துவர் கதிரியக்கத்தால் புற்று​நோய்வராது என்கிற மாதிரி ஊடகங்களில் உளறினார். இந்தியப் பார்ப்பனிய அரசு இப்படிப் பல​ரையும் ​பேச ​வைத்தது. ​

மருத்துவராக​வோ, அறிவியலாளராக​வோ இருந்தாலும் பார்ப்பான் அ​தை​யெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் பார்ப்பனிய முகத்​தைக்  காட்டக்கூடியவன் என்பதால் அணுஉ​லைக்கு ஆதரவாகப் ​பேச​ நேர்ந்ததில் சாந்தாவுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருக்கப்​போவதில்​லை.
(பார்ப்பான் எதற்கும் ​வெட்கப்படமாட்டான் என்ற ​கொளத்தூர் மணியின் ​பேச்சு நி​னைவுக்கு வருகிறது.)

கூடங்குளம் ​போராட்டத்தில் ​போராடும் மக்களுக்கு ஆதரவாக புதியத​லைமு​றை ​செய்தி ​வெளியிட​வேண்டும். இல்​லை​யேல் அது வழங்கும் தமிழன் விருதுக​ளை தமிழன் என்று ​சொல்லிக்​கொள்பவர்கள் புறக்கணிக்க​வேண்டும் என்று ஈ​கைதிறனில் முன்​பொரு பதிவிட்டிருந்த  நி​லையில்,  அணுஉ​லை​யை  ஆதரிக்கும் பாப்பாத்திக்​கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. நமக்கு அதிர்ச்சியல்ல. புதியத​லைமு​றை​யை நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏ​ஜென்டாக இருந்து உ​ரம் மற்றும் பூச்சிக்​கொள்ளிக​ளை புகுத்தி நமது ​நிலத்​தைப் பாழ்படுத்திய-படுத்தும் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது.  இன்​னொரு  பக்கம்  நம்பிக்​கை நட்சத்திரம் விருது ​இயற்​​கை ​வேளாண்​​மையில் ஈடுபடும் ரேவதி  என்பவருக்கு. இதுதான் ஊடகங்கள் ​சொல்லும்  நடுநி​லை​யோ!

த​லைப்​பை​யொட்டி நாம் இப்​போது தமிழ்​தேசியவாதிகளிடம் முன்​வைக்கும் ​கேள்வி.  பார்ப்பான் தமிழனா?

நீவீர் இல்​லை என்று ​சொல்பவராயின் உமது கண்டனம் என்ன?

விளம்பரப்பிரியர்களான உங்களுக்கு  ​புதியத​லைமு​றை​யை  எதிர்த்துக்  ​கேள்வி​ கேட்கத்துணிவுண்டா?

பிற்சேர்க்​கை:
(இதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் சாந்தா, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகி​யோர் தமிழர்களல்ல என்ப​தோடு, விருதுக்குத் தகுதியற்றவர்கள். ​மேலும் மற்ற பார்ப்பான்களுக்கும் விருது வழங்கிய​தை விமர்சிக்கக் காரணம் தமிழன் விருது என்று அறிவித்ததனால்தான். புதியத​லைமு​றை விருது என்று அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் ​கேள்வி ​கேட்கப்​போவதில்​லை. இ​தைக்கூட புரிந்து​கொள்ள இயலாத ​டோண்டு பாப்பான் எந்த வ​கையில் விருதுக்கு தகுதியில்​லை என்று ​கேள்வி எழுப்பியுள்ளான். நமக்கு வயிற்​​றெரிச்சல் என்கிறான். கூட​வே ​​ஜெய​மோக​னையும் து​ணைக்கு அ​ழைத்திருக்கிறான். இந்துத்துவவாதிகள் எதற்​கெடுத்தாலும் எடுத்தாளும் ப​டைப்புகள் ​ஜெய​மோகனு​டைய​வை.)

Wednesday, April 4, 2012

தமிழுக்கு அமுதென்று பேர் - நாகூர் இ.எம்.ஹனிபா பாடியது

தமிழுக்கு அமுதென்று பேர் என்று உணர்வுப்பூர்வமாக இந்த இசுலாமியப் பெரியவர் பாடுகிறார். அரங்கம் இசுலாமியர்களால் நிறைந்திருக்கிறது. 

பார்ப்பான் தமிழை நீசபாஷை என்கிறான். கோயிலுக்குள் தமிழுக்கு தடைவிதிக்கிறான். அந்தப்பார்ப்பானுக்கும் இந்துமதத்துக்கும் நம்மவர்கள் ஜல்ரா. இதற்கெதிராக ஒரு ஆணியைக்கூட புடுங்கமுடியாதவனெல்லாம்தான் திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டான். 


Tuesday, April 3, 2012

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் சீமான்


சீமான் பல கூட்டங்களில் தனது தொண்டரடிப்பொடிகளை மகிழ்விக்க உடல்முறுக்கி, வீரதீர சாகசப் பயிற்சிகள் செய்வதுண்டு. தனது பேச்சை உடற்பயிற்சி என்று அவ​ரேதான் சொல்லியிருக்கிறார். 

அப்படி உடற்பயிற்சியாகிப்போன அவரது பேச்சில் பொருள் தேடுவதோ, கருத்துப்பிழைகளைப் பார்ப்பதோ நம்முடைய தவறுதான். இருந்தாலும் அவர் அடிக்கடி உளறும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கடந்த அணுஉலை மாநாட்டில் கூட காலையில் அப்படி உளறினார்.

சீமானின் பேச்சிலிருந்து....
"புலிகளின் பணம் 2500 கோடி சீமானிடம் உள்ளது என்கிறார்கள். 2500கோடிப் பணம் இருந்திருந்தால் சண்டை ஏண்டா போடப்போறோம். ராஜபக்சேவுக்கு 500 கோடி கொடுத்து நாட்டைப் பிடிச்சிருப்போம்".

கரும்புலியானதும் ஆயுதம் தரித்ததும் வெட்டிவேலை என்கிறார் போலும் சீமான். புலிகளின் போராட்டத்தை சீமான் அளவுக்கு கொச்சைப்படுத்தியவர்கள் யாரேனும் உண்டா தெரியவில்லை.

இன்னது பேசுகிறோம் என்ற தன்மதிப்பீடு இல்லாமல் உளறும் சீமானுக்கு அவரது தொண்டரடிப்பொடிகளின் வரவேற்புதான் கேவலத்திலும் கேவலம். இவர்கள் தான் இப்போ அண்ணனின் திராவிட இயக்க எதிர்ப்பு உளறலுக்கு ஜால்ராக்கள்.

கவிஞர் வைரமுத்து மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் திராவிடர் அரசியலை கொச்சைப்படுத்த நினைக்கும் சிலரைப் பார்க்கையில் அவரது கவிதையில் ஒன்று எனக்கு அடிக்கடி நினைவு வரும். காலமே என்னைக் காப்பாற்று என்ற நீண்ட கவிதையில், "ஒரே ஒரு புத்தகம் படித்த அறிவாளியிடமிருந்தும் காலமே என்னைக் காப்பாற்று!" என்ற வரிகள் அவை. 

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற ஒரே ஒரு புத்தகம் படித்த அறிவாளிகள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள். இவர்களுக்கு திராவிடர் இயக்கம் தமிழர்களுக்கு ஆற்றிய பணிக​ளை அறியும் ஆவல் இல்​லை. படிப்புச் ​சோம்​பேறிகள். படிக்காமல் பிறர் வாந்தி எடுத்ததை உண்டு வாந்தி எடுக்கும் அறிவாளிகள் தாம் நாம் தமிழர்.

Friday, March 23, 2012

புதியத​லைமு​றையின் தமிழன் விருகளும் தமிழர் வி​ரோத​போக்கும்


சன், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் கூடங்குளம் விடயத்தில் அரசின் பக்கம் நிற்கின்றன. 

சேனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டது, அமெரிக்கத் தீர்மானத்தையொட்டி சில விவாதங்களை ஒளிபரப்பியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக புதியதலைமுறை தமிழர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக ஓர் எண்ணம் நம் தோழர்களிடையே உருவாகியிருக்கிறது.

ஆனால். புதியதலைமுறை கூடங்குளம் விடயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. மூவர் விடுதலைக்கான நமது போராட்டங்களிலும் அது அரசின் கைக்கூலிதான். 

ஈழப்பிரச்சனையில்கூட இலங்கைக்கு நேரில் சென்று பதிவுசெய்த காட்சிகளுடன் அமெரிக்கத் தீர்மானத்துக்கு முன்பு புதியதலைமுறை ஒளிபரப்பிய ஆவணப்படம் நமக்கு எதிரானதுதான். இந்நிலையில் அது தமிழர் நலனில் அக்கறை என்பது போன்ற பாவனை ஏன்?

ஏனெனில், தமிழன் விருதுகள் என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்தவர்களை விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்கிறது. 

கடந்த சில வாரங்களுக்குமுன்பு வரை புதியதலைமுறையின் விருது தினமலர், ஹிந்து போன்ற தமிழர்நலனுக்கு எதிரானவர்கள் விருதுவழங்கினால் எப்படி பார்க்கப்படுமோ அதற்கு ஒப்பானதாகவே இருந்தது. 

உண்மையாக தமிழர் ஏற்றம்பெற உழைப்பவர்கள் புதியதலைமுறையின் விருதினை நிராகரிக்கக்கூடிய நிலைதான் இருந்தது. இந்த நிலையை மாற்ற புதியதலைமுறை எடுத்தமுயற்சிதான் ஈழத்தமிழர் மீதான அக்கறை என்று எனக்குப்படுகிறது. 

தமிழர் நலனில் புதியதலைமுறைக்கு உண்மையாக அக்கறை இருக்குமெனில், இடிந்தகரையில் பட்டினியால் எரியும் எம் தோழர்களுக்கும் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட போராடும் மக்களுக்கும் ஆதரவாக இருந்து மத்திய-மாநில அரசுகளின் கொடிய முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

இல்லையெனில், புதிய தலைமுறை வழங்கப்போகும் விருதுகளை தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்கள் நிராகரிக்கவேண்டும்.

Monday, March 19, 2012

​தேசிய இனங்க​ளைக் கடிக்கும் இந்தியா


1999 ல் நான் கோவையில் இருக்கும்போது கவிஞர் பாலைநிலவன் சாலையில் கண்ட பசுவுக்கும் வெறிநாய்க்குமான சண்டை பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.

பூனை புலியாகிவிடும் என்பதான சொல்லாடல்களை நாம் அறிவோம் என்றாலும் அதைக் காட்சி வடிவில் கண்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் அவர் இருந்தார்.

அதாவது வெறிநாயொன்று முக்கிய சாலையின் நடுவே பசு மாடு ஒன்றை கடித்து துன்புறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. வாகனங்கள் நின்று போக்குவரத்து நெருக்கடியானது. பசுவின் மீது மற்றவர்களுக்கு பரிவு இருந்தும் வெறிநாய்க்குப் பயந்து அருகில் செல்லாமல் பொருமை காத்துவிட்டனர்.

தொடர்ந்து கடிபட்ட பசு நான்கு எட்டு பின்னே வந்து ஒரே முட்டு. அவ்வளவுதான். நாய் குடல் சரிந்து இறந்தது.

இந்தியா நேரடியாகவும் மாநில அரசுகள் வழியாகவும் தேசிய இனங்களைக் கடித்துக்கொண்டிருக்கிறது.

பொருமையின் எல்லை உடையத்தொடங்கிவிட்டது.
குடல் சரியும்.

(பதிவுக்கான படம் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)